Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியாது: வித்யா பாலன்

10 டிச, 2015 - 06:29 IST
எழுத்தின் அளவு:
money-is-not-a-important:-vidya-balan

கோலிவுட்டில், 37 வயதில், ஹீரோயினாக நடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், பாலிவுட்டில் இதை சாதித்து காட்டியுள்ளார், பாலக்காட்டு தேவதை வித்யா பாலன். தனக்கேற்ற கதையை தேடிப் பிடித்து நடிப்பதில், வித்யாவை மிஞ்ச, வேறு நடிகை இல்லை.


அவர் அளித்த பேட்டி:


திடீரென, மராத்தி படங்களில் நடிக்கிறீர்களே?


நான், மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மராத்தி கலாசாரம் மட்டுமல்ல, மராத்தி மொழியும், நன்றாக தெரியும். இதனால், மராத்தி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், நீண்ட நாட்களாகவே இருந்தது. அந்த ஆசை, இப்போது தான் நிறைவேறியுள்ளது.


மராத்தி திரைப்படத் துறை, உங்களுக்கு வசதியானதாக இருக்கும் என நினைக்கிறீர்களா?


மராத்தி மொழி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தான் நடித்தேன். மொத்தமே, ஆறு நாட்கள் தான், கால்ஷீட் கொடுத்தேன். அதனால், பெரிய பிரச்னை எதுவுமில்லை. பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமில்லை. பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியாதல்லவா?


மற்ற மொழி படங்களிலும் நடிக்கும் திட்டம் உள்ளதா?


உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென நினைக்கிறேன்; என் முதல் படமே, பெங்காலி படம் தான். பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. எனக்கேற்ற கதைக் களமாக இருந்தால், கண்டிப்பாக, மற்ற மொழி படங்களிலும் நடிப்பேன்.


இந்தி படங்களில் நடிப்பதை தவிர்க்கிறீர்களா?


அப்படியெல்லாம் எதுவுமில்லை. கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இந்தியில் அதிகம் நடிக்காததற்கு, எனக்கேற்ற கதைகள் கிடைக்காதது தான் காரணம். இப்போது கூட, தினமும், நான்கு மணி நேரத்துக்கு மேல், புது கதைகளை கேட்கத் தான் செய்கிறேன். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை.


உங்கள் கணவரைப் போல், உங்களுக்கும் படம் தயாரிக்கும் ஆசை உள்ளதா?


அய்யய்யோ; அந்த ஆசை எதுவுமில்லை. படத் தயாரிப்பு வேலை எல்லாம் என் கணவருடன் முடியட்டும். எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.


நீங்கள் கடைசியாக பார்த்த படம்?


பாகுபலி. அந்த படத்தை ரசித்து, அனுபவித்து பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படைப்பு.


படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்ன செய்கிறீர்கள்?


சின்ன வயதில் இருந்தே, எனக்கு வாசிப்பதில் அதிகம் விருப்பம். இப்போது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கிறேன். நல்ல இசையை ரசிக்கிறேன். நல்ல படங்களை பார்க்கிறேன். எனக்கு பிடித்தவர்களுடனும், என்னை பிடித்தவர்களுடனும் பேசிப் பேசி பொழுதை கழிக்கிறேன். இந்த வாழ்க்கை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது; சந்தேஷமாக அனுபவிக்கிறேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in