தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோலிவுட்டில், 37 வயதில், ஹீரோயினாக நடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், பாலிவுட்டில் இதை சாதித்து காட்டியுள்ளார், பாலக்காட்டு தேவதை வித்யா பாலன். தனக்கேற்ற கதையை தேடிப் பிடித்து நடிப்பதில், வித்யாவை மிஞ்ச, வேறு நடிகை இல்லை.
அவர் அளித்த பேட்டி:
திடீரென, மராத்தி படங்களில் நடிக்கிறீர்களே?
நான், மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மராத்தி கலாசாரம் மட்டுமல்ல, மராத்தி மொழியும், நன்றாக தெரியும். இதனால், மராத்தி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், நீண்ட நாட்களாகவே இருந்தது. அந்த ஆசை, இப்போது தான் நிறைவேறியுள்ளது.
மராத்தி திரைப்படத் துறை, உங்களுக்கு வசதியானதாக இருக்கும் என நினைக்கிறீர்களா?
மராத்தி மொழி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தான் நடித்தேன். மொத்தமே, ஆறு நாட்கள் தான், கால்ஷீட் கொடுத்தேன். அதனால், பெரிய பிரச்னை எதுவுமில்லை. பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமில்லை. பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியாதல்லவா?
மற்ற மொழி படங்களிலும் நடிக்கும் திட்டம் உள்ளதா?
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென நினைக்கிறேன்; என் முதல் படமே, பெங்காலி படம் தான். பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது. எனக்கேற்ற கதைக் களமாக இருந்தால், கண்டிப்பாக, மற்ற மொழி படங்களிலும் நடிப்பேன்.
இந்தி படங்களில் நடிப்பதை தவிர்க்கிறீர்களா?
அப்படியெல்லாம் எதுவுமில்லை. கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இந்தியில் அதிகம் நடிக்காததற்கு, எனக்கேற்ற கதைகள் கிடைக்காதது தான் காரணம். இப்போது கூட, தினமும், நான்கு மணி நேரத்துக்கு மேல், புது கதைகளை கேட்கத் தான் செய்கிறேன். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை.
உங்கள் கணவரைப் போல், உங்களுக்கும் படம் தயாரிக்கும் ஆசை உள்ளதா?
அய்யய்யோ; அந்த ஆசை எதுவுமில்லை. படத் தயாரிப்பு வேலை எல்லாம் என் கணவருடன் முடியட்டும். எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நீங்கள் கடைசியாக பார்த்த படம்?
பாகுபலி. அந்த படத்தை ரசித்து, அனுபவித்து பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படைப்பு.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்ன செய்கிறீர்கள்?