பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையில் என்ற பிறந்தநாளை கொண்டாடுவதை தவிர்த்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் பெய்த பருவமழையில் தலைநகர் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழையால் மக்கள் வாழ்விடத்தை இழந்து, உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர். இந்தசூழலில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஏராளமான பொதுமக்கள் நிதியுதவி, பொருள் உதவி, உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையி்ல வெள்ள நிவாரண நிதியாக ரஜினி சார்பில் ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது தகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தொகை. ஏனென்றால் வெளிமாநில நடிகர்களே ரூ.1 கோடி, ரூ.2 கோடி என்று நிதி அளித்துனர். ஏன் நடிகர் லாரன்ஸ் கூட ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
இந்தச்சூழலில் வருகிற டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் வருகிறது. பொதுவாக ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆனால் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினி.
இதுதொடர்பாக ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே இப்போதைய முக்கிய பணி, ஆகையால் எனது பிறந்தநாள் முக்கியமல்ல ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்தாண்டு ரஜினி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும் ரஜினியின் பிறந்தநாளில் எந்திரன்-2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இப்போது அதுவும் தள்ளிப்போகலாம் என தெரிகிறது.