டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாசக்கார நண்பர்கள், சாட்டை, கீறிப்புள்ள உள்பட படங்களில் நடித்தவர் யுவன். அவர் தற்போது இளமி என்றொரு சரித்திர கால படத்தில் நடித்து வருகிறார். 18-ம் நூற்றாண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க மதுரையில் நடக்கும் கதை என்பதால், மதுரை, தேனி பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தி விட்டு வந்துள்ளனர். தற்போது இறுதிகட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது. இந்த இளமி படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுகிறார்கள்.
இந்த படம் குறித்து யுவன் கூறும்போது, இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் இருந்து இந்த படத்திற்காக எனது பாடிலாங்குவேஜையே மாற்றி நடித்துள்ளேன். கதைப்படி இளமி என்ற பெண்ணும், நானும் காதலிப்போம். அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் சொல்லும் மாட்டை அடக்கினால்தான் முடியும் என்கிற கண்டிசன் இருக்கும். அதனால் ஜல்லிக்கட்டுக்காளைகளை அடக்கும் வீரரான நான், அவர்கள் சொல்லும் மாட்டை அடக்கி எப்படி இளமியை அடைகிறேன் என்பதுதான் கதை.
இந்த படத்தில் மதுரை தமிழ் பேசி அனைவரும் நடித்திருப்பதோடு, அரசர் காலத்து காஸ்டியூம் அணிந்துதான் நடித்திருக்கிறோம். ஜூனியர் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் கிஷோர், மன்னரின் படைத்தளபதி வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. மேலும், இதற்கு முன்பு நடிப்புக்காக பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காத நான் இந்த படத்திற்காகத்தான் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன். குறிப்பாக, ஜல்லிக்கட்டு காளையுடன் மோதும் காட்சிக்காக சில வாரங்கள் பயிற்சி எடுத்து நடித்தேன். அந்த ஒரு காட்சி மட்டுமே 10 நாட்களாக படமாக்கப்பட்டது. அதனால் இதுவரை சாட்டை யுவன் என்று சினிமா வட்டாரங்களில் அழைக்கப்பட்டு வரும் நான், இந்த படத்திற்கு பிறகு இளமி யுவன் என்று அழைக்கப்படுவேன் என்கிறார் யுவன்.