ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் அறிமுகமானவர் ஜெய்குஹெய்னி. அந்த படத்தின் மெயின் கேரக்டரில் நடித்த விஜி சந்திரசேகருக்கு மகளாக நடித்தார். அதன்பிறகு மெய்யழகி, மய்யம் உள்பட சில படங்களில் நடித்த ஜெய்குஹெய்னி, வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் கதையோடு கலந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இரவில் என்றொரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தான் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, இந்த இரவில் படத்தில் நான் ஒரு துணிச்சலான பெண்ணாக நடிக்கிறேன். ஒரு இரவில் நடக்கும் கதையில் இப்படம் உருவாகிறது. கிட்டத்தட்ட ஹீரோக்கள் நடிப்பது போன்ற ஒரு அதிரடி வேடம் இது. அதனால் இந்த படம் என்னை பேச வைக்கும். இதே படத்தில் ஜெனிலியா சாயலில் ஒரு மும்பை நடிகையும் நடிக்கிறார். ஆக, இரண்டு ஹீரோயினிகளில் நானும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறேன். தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த படத்திற்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்திலும் நான் கமிட்டாகவில்லை.
அதோடு, எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்பது இல்லாமல் கிளாமர் அல்லாத வேடங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் நான் இருக்கிறேன். அதனால்தான் பல படங்கள் வந்தும் என்னால் நடிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி, முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. அந்த வகையில், வில்லி மாதிரியான வேடங்கள் கிடைத்தாலும் நான் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை எனது திறமைக்கு சவால் விடக்கூடிய எந்த மாதிரி வேடங்களிலும் நடிப்பேன். அந்த விசயத்தில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்கிறார் ஜெய்குஹெய்னி.