மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகு மூலமும், வெள்ளத்தில் இறங்கியும், உணவு பொருட்களை வழங்கி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் மிதக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அகதிகளை போன்று முகாம்களில் தங்கியுள்ளனர். பலர் வீட்டில் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். உண்ண உணவு, குடிக்க குடீநீர் என்று மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு சமைத்து கொடுத்து வருகின்றனர். ரஜினி, விஜய் தங்களது திருமண மண்டபங்களை கொடுத்து உதவியுள்ளனர்.
இந்நிலையில் அரசியல்வாதிகளே வானத்தில் பறந்தபடி வெள்ள சேதத்தை பார்வையிட்டு விட்டு சென்ற சூழ்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவரே படகு ஒன்றை ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.