'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்களான பிருத்விராஜும் இந்திரஜித்தும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பதினோரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக அண்ணன்-தம்பி கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆவது இவர்களுக்கு மட்டும் தான். இந்திரஜித்தும் பிருத்விராஜும் சேர்ந்து பண்ணும் கலாட்டாக்களால் ஷூட்டிங் ஸ்பாட்டே சும்மா அதிரும்..
இன்றைய தேதியில் தான் முன்னணி கதாநாயகன் என்றாலும் தனது அண்ணன் இந்திரஜித்தை பார்த்து பொறாமைப்படவே செய்கிறார் பிருத்விராஜ். காரணம் ஹீரோவாக அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து இன்றுவரை ஹீரோவாகவே தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால் இந்திரஜித்தோ வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்திர நடிகாரக, தனி ஹீரோவாக என மாறிமாறி நடித்து வருகிறார். தான் ஹீரோ என்கிற வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்க, தனது அண்ணன் மட்டும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து தனக்கு பொறாமையாக இருக்கிறது என்கிறார் பிருத்விராஜ்.