ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் சென்னை நகரம் முழுவதுமே ஸ்தம்பித்து போய் தனித்தீவாக காட்சியளிக்கிறது. எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியிளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அகதிகள் போன்று வீட்டை விட்டு வெளியேறி முகாம்களிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். இந்தச்சூழல் சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
பாதுகாப்பான ஒரு அறையில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக சென்னை மக்கள் மழை-வெள்ளத்தில் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறேன். இதை பார்க்கும் வெட்கமாக உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால், மற்ற ஊர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பணக்காரர்கள் பிறர்படும் துன்பத்தை எண்ணி வெட்கப்பட வேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கத்தை உண்டாக்குகிறது.
மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போய் உள்ளது. சென்னையில் மழை நின்றாலும் இதிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது வரிப்பணங்கள் எதுவும் உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்று தெரிகிறது.
மழை போன்ற இயற்கை பேரழிவுகள் வந்தால் உடனே எங்களை போன்றவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறது அரசு. அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகத்தான் சம்பாதிக்கிறேன். நான் சம்பாதிப்பது குறைவு தான் என்றாலும் கொடுக்க வேண்டியது என் கடமை என்பது எனக்கும் தெரியும். கண்டிப்பாக நான் உதவி செய்வேன். ஆனால் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரர்களின் பணம் அல்ல, உண்மையிலேயே மக்கள் நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.