இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளம் மற்றும் தமிழில் இரவல் குரலோடு நடிக்கும் மேக்னா ராஜ் தாய்மொழியான கன்னடத்தில் சொந்த குரலிலேயே பேசி நடிக்கிறார். இதுவே பெரிய விஷயம் என்றால் நடிப்பது போக பாடுவதையும் பேஷனாக வைத்திருக்கிறார். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படத்தில் பாடிவிட்ட மேக்னா ராஜ், மலையாளத்திலும் தான் நடித்த 1௦௦ டிகிரி செல்சியஸ் படத்தில் ஒரு பாடலை பாடினர். சிறுவயதிலேயே இவருக்குள் இருந்த பாடும் திறமையை கண்டறிந்து ஊக்குவித்தது இவர் தந்தைதானாம். அதுமட்டுமல்ல, இசை பற்றிய பல நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தாராம்.
இப்போது மீண்டும் தான் நடித்துவரும் 'தேவரானே பிடு குரு' என்கிற படத்தில் தனது அடுத்த பாடலை பாடியுள்ளார் மேக்னா ராஜ். இந்தப்பாடலில் இன்னும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் கன்னட சினிமாவின் டாப்மோஸ்ட் ஹீரோக்களான புனித் ராஜ்குமார், சுதீப், உபேந்திரா மற்றும் பிரேம் ஆகியோருடன் இணைந்து பாடியிருக்கிறார் மேக்னா ராஜ். நடிப்பதை விட ஒரு பாடகியாக மாறும்போது கிடைக்கும் சந்தோசம் இன்னும் கூடுதலாக இருப்பதாக சொல்லும் மேக்னா ராஜுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதுதான் லட்சியமாம்.. அப்போது தான் தனது இசைப்பயணம் முழுமையடையும் என்கிறார் மேக்னா ராஜ்.