'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ராதிகாவின் மகள் ரயான். இவருக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் அடுத்தாண்டு திருமணம் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சரத்குமாரை என் வளர்ப்பு தந்தையாக கருதவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... என்னுடைய நிச்சயதார்த்தத்தின் போது வெளியான செய்திகளில் சரத்குமாரை என் வளர்ப்பு தந்தை என்றே எழுதினார்கள். இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. எல்லா விஷயங்களிலும் அவர் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார், எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார். அவரை என் வளர்ப்பு தந்தையாக பார்க்கவில்லை. அன்பை காட்டும் ஒரு தந்தையை விட மேலானவராகவே அவரை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ரயான்.