ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
அடை மழை பெய்தாலும் சரி.... தமிழகம் வெள்ளத்தில் மிதந்தாலும் சரி... அதைப் பற்றி கவலைப்படாமல் வாரந்தோறும் ஏகப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடந்த வாரம் உப்புக்கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144 ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. வரும் வாரத்தில் ஈட்டி, ரஜினி முருகன், உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளன.
அதற்கு அடுத்த வாரம் அதாவது டிசம்பர் 11 அன்று கரையோரம் மற்றும் சில படங்கள் வெளியாகின்றன. டிசம்பர் 18 அன்று தனுஷ் நடித்த தங்கமகன், ஹலோ நான் பேய் பேசுகிறேன், உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களும், டிசம்பர் 24 அன்று பசங்க-2, ஜில் ஜங் ஜக், அஞ்சல, ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவை தவிர சவுகார்பேட்டை, உட்பட அரை டஜன் படங்களும் டிசம்பரில் வெளியாகத் தயாராக உள்ளன. ஏறக்குறைய டிசம்பர் மாதத்தில் மட்டும் 15க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் சூழ்நிலைக்கு ஒருவகையில் தணிக்கைக்குழுவும் காரணம் என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்ட படங்களை உடனடியாய் பார்க்காமல் சுமார் ஒரு மாதத்துக்கு மேல் காலம் கடத்தியதால்தான் நிறைய படங்கள் தேங்கி தற்போது ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.