அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
அடை மழை பெய்தாலும் சரி.... தமிழகம் வெள்ளத்தில் மிதந்தாலும் சரி... அதைப் பற்றி கவலைப்படாமல் வாரந்தோறும் ஏகப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடந்த வாரம் உப்புக்கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144 ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. வரும் வாரத்தில் ஈட்டி, ரஜினி முருகன், உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளன.
அதற்கு அடுத்த வாரம் அதாவது டிசம்பர் 11 அன்று கரையோரம் மற்றும் சில படங்கள் வெளியாகின்றன. டிசம்பர் 18 அன்று தனுஷ் நடித்த தங்கமகன், ஹலோ நான் பேய் பேசுகிறேன், உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களும், டிசம்பர் 24 அன்று பசங்க-2, ஜில் ஜங் ஜக், அஞ்சல, ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவை தவிர சவுகார்பேட்டை, உட்பட அரை டஜன் படங்களும் டிசம்பரில் வெளியாகத் தயாராக உள்ளன. ஏறக்குறைய டிசம்பர் மாதத்தில் மட்டும் 15க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் சூழ்நிலைக்கு ஒருவகையில் தணிக்கைக்குழுவும் காரணம் என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்ட படங்களை உடனடியாய் பார்க்காமல் சுமார் ஒரு மாதத்துக்கு மேல் காலம் கடத்தியதால்தான் நிறைய படங்கள் தேங்கி தற்போது ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.