விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கடும் மழையினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை வந்து மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் உதவிகளை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், இவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னும் பலர் நிவாரண உதவிகளை வழங்காதது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. எப்படியோ சூர்யா குடும்பத்தினர் கடந்த வாரம் வெள்ள நிவாரண உதவியை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின் ஒவ்வொரு நடிகராக தங்களது நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கி வருகின்றனர்.
ஆனாலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என நாம் காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். சற்று முன்னர் ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செக்கை அவர்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரஜினிகாந்த் அவருடைய உதவியை அறிவித்துவிட்டார், அடுத்து கமல்ஹாசன், விஜய், அஜித் அறிவிப்பார்களோ?