இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்நாடு மீண்டும் ஒரு மழை வெள்ள சேதத்தில் நேற்று முதல் தவிக்க ஆரம்பித்து விட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வந்த மழையை விட இப்போது பெய்து வரும் மழை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அந்த சேதத்திலிருந்தே இன்னும் மீளாத தமிழகம் அடுத்த சேதத்திற்குத் தாங்குமா என்பது தெரியவில்லை.
ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்ட போது யாருமே கேட்காமலே வாரி வழங்கிய தமிழ் நடிகர்கள் தமிழ்நாட்டில் வெள்ளம் ஏற்படும் போது வாய் மூடி இருப்பதேன் என திரையுலகத்திலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் குரல் உயர்ந்தது. அதன் காரணமாக சூர்யா, கார்த்தி, சிவகுமார், விஷால், சத்யராஜ், சிபிராஜ், தனுஷ், விக்ரம் பிரபு, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிகர் சங்கத்தினரிடம் தங்களது வெள்ள நிவாரணத் தொகையை வழங்கியுள்ளனர்.
ஆனால், தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் முதன்மையானவர்கள் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரும், பல முன்னணி நடிகைகளும் இதுவரை எந்தத் தொகையும் அளிக்காமல் அமைதி காத்து வருவது திரைப்பட ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது படங்களை தமிழ்நாட்டில் ஓட வைக்கும் ரசிகர்களுக்காக அவர்கள் இன்னும் எதையும் செய்ய முன் வராதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.