கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடும் மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் புறம்நகர் பகுதிகளில் வாழும் மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, இருப்பிடம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது சினிமா உலகைச்சேர்ந்த சூர்யா, பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தி, விஷால் உள்ளிட்ட சில நடிகர்களும் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கவர்ச்சி நடிகை சோனா, ரைஸ் பவுல் சேலஞ்ச் என்கிற அமைப்பு மூலமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதாவது, சோனாவின் இந்த அமைப்பு மூலமாக பலர் உதவிகள் வழங்கி வருகிறார்களாம். அந்த வகையில், இதுவரை 1500 கிலோ அரிசி உள்பட பல நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ள சோனா, தனது அமைப்பின் மூலம் பெறப்படும் உதவிப்பொருட்களை நடிகர் சங்கம் மூலமாக விநியோகம் செய்து வருகிறாராம்.