ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாணா காத்தாடி சமந்தா, பின்னர் தெலுங்குக்கு சென்று நம்பர்-ஒன் நாற்காலியை பிடித்தார். அதன்பிறகு தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்தவர், மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி காரணமாக அந்த படங்களில் இருந்து வெளியேறினார். இருப்பினும், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தே தீருவேன் என்று தீவிர முயற்சி எடுத்து சூர்யாவுடன் அஞ்சான், விஜய்யுடன் கத்தி படங்களில் நடித்து இப்போது கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாகி விட்டார் சமந்தா. அதோடு, சில படங்களில் கவர்ச்சியாக நடித்தும் இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்த சமந்தாவின் கவனம் இப்போது பர்பாமென்ஸ் கேரக்டர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால் கவர்ச்சிக்கு ஓய்வு கொடுத்து விட்டு திறமையை காட்ட வரிந்து கட்டியிருக்கிறார். அந்தவகையில், பத்து எண்றதுக்குள்ள படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தவர் ஒரு வேடத்தில் ஜாதி வெறி பிடித்த பெண்ணாக நடித்து மிரட்டினார்.
அதைத் தெடர்ந்து இப்போது வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள தங்கமகன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்துள்ளார் சமந்தா. பொறுப்பில்லாமல் அலையும்போது எமிஜாக்சனை காதலிக்கும் தனுஷ்க்கு பின்னர் சமந்தாவை திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். அதையடுத்து தனுஷை சமந்தா எப்படி மாற்றுகிறார் என்பதுதான் கதையாம். இந்த வேடத்தில் நடித்தபோது பெரிதாக மேக்கப் போடாமல் பக்கா குடும்பப் பெண்ணாக இயல்பாக நடித்துள்ளாராம் சமந்தா. அந்தவகையில், தங்கமகனில் தனுஷின் அப்பா அம்மாவாக நடித்துள்ள டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோர் சில காட்சிகளில் சமந்தா உணர்வுப்பூர்வமாக நடித்தைப் பார்த்து கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்களாம். இதை தனது சக நடிகைகளிடம் பெருமையாக கூறி வரும் சமந்தா, படப்பிடிப்பு தளத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த இந்த கைதட்டல், அடுத்து படம் தியேட்டருக்கு வரும்போதும் பெரிய அளவில் கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்.