பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மாஸ் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 24. சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கின்றார். தெலுங்கில் மனம் எனும் வெற்றிப் படம் இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்திற்கு பின்னர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. சிங்கம் 3 படத்தை முடித்த பின்னர் டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஹாரிகா ஹாசினி கிரியேசன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ராதா கிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நிதின் சமந்தா நடிப்பில் அ..ஆ எனும் தெலுங்கு படத்தை இயக்கி வரும் திரிவிக்ரம் அப்படத்திற்கு பின்னர் அகில் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யா படத்தை திரிவிக்ரம் இயக்கவுள்ளதாக கூறப்படும் தகவல் அகிலின் தந்தை நாகார்ஜுனாவிற்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.