ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் கதாநாயகி என்கிற லெவலை தாண்டி மிக முக்கியமான நடிகையாக கடந்த இரண்டு வருடங்களில் உருவாகியிருப்பவர் நடிகை சிருந்தா. '1983' படத்தில் தனது கணவன் நிவின்பாலி வீட்டில் மாட்டியிருக்கும் சச்சின் படத்தை காட்டி, “இது யாரு சேட்டா” என கிரிக்கெட் வெறியரான நிவின்பாலியின் இதயத்தில் குண்டுபோட்டு, அந்த காமெடி மூலமாகத்தான் சீக்கிரமே பாப்புலரானார். சமீபத்தில் வெளியான அமர் அக்பர் ஆண்டனி படத்தில் கூட திருமணமான நான்கு நாட்களிலேயே கணவன் ஓடிவிட, அதன்பின் தனக்கு பிறக்கும் குழந்தையுடன் பிருத்விராஜின் வீட்டில் தங்கிவிடுவார்.
விஷயம் என்னவென்றால் நிஜத்திலும் தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் தனித்தே வாழுகிறார் சிருந்தா ஆஷப். இத்தனைக்கும் காதல் திருமணம் செய்துகொண்டவர் தான். பிரிவுக்கு என்ன காரணம் என்றால், “அது கல்லூரி படிக்கும்போது ஏற்படும் இனக்கவர்ச்சியினால் 19 வயதில் உருவான காதல், இருந்தாலும் எங்கள் வீட்டின் சம்மதத்துடன் தான் ஆஷப்பை மணந்தேன். ஒரு வருடத்திலேயே எங்கள் இருவரின் கருத்தும் உலகமும் வெவ்வேறு என புரிந்தது. டீசன்ட்டாக பிரிந்துவிட்டோம்” என்று சொல்கிற சிருந்தா, இன்னும் ஆஷப்பிடம் இருந்து முறைப்படி டைவர்ஸ் வாங்கவில்லையாம். மேலும் ஆஷப் மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லையென்பதுடன் இன்னும் பிரிந்துபோன கணவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறாராம் சிருந்தா.