பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய்சேதுபதி, விஷ்ணு இருவரையும் வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கினார் சீனுராமசாமி.
கடந்த வருடமே படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படப்பிடிப்பு முடிவடைந்த சில மாதங்களிலேயே போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகளை முடித்து படத்தை ரெடி பண்ணினார் சீனுராமசாமி.
அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட முடியவில்லை.
அதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளானார் சீனுராமசாமி.
அவரது கஷ்டத்தைப் போக்குவதற்காகவே ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிப்பில் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பை சீனுராமசாமிக்கு வாங்கிக் கொடுத்தார் விஜய்சேதுபதி.
அவரது நல்ல மனசை குறிக்கும் வகையில் தர்மதுரை என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
வழக்கமாக தன் படத்தின் கதாநாயகிகளை விஜய்சேதுபதிதான் தீர்மானிப்பார்.
அந்த அடிப்படையில், அவரது ஆஸ்தான நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ஆகிய இருவரும் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பார்கள் என்ற தெரிகிறது.
மற்ற இரண்டு கதாநாயகிகள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம்.