பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரன்வீர் சிங், தீபிகா, ப்ரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் பஜிராவ் மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் டிச.,18ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றி ப்ரியங்காவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக இந்தப்படத்தில் ரன்வீர்-தீபிகாவிற்கு பதில் சல்மான்-ஐஸ்வர்யா நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா, சல்மான்-ஐஸ்வர்யா, ரன்வீர்-தீபிகாவை ஒப்பிட வேண்டுமானால் முதலில் இப்படத்தில் சல்மான்-ஐஸ்வர்யா நடித்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை பஜ்ராவ் மஸ்தானி படத்தில் ரன்வீர்-தீபிகாவை விட சிறப்பாக யாரும் நடித்திருக்க முடியாது. இந்தப்படம் உருவாக 12 ஆண்டுகளாகியுள்ளது. இந்த பலன் எல்லாம் ரன்வீர், தீபிகாவையே சாரும், இதில் சல்மான்-ஐஸ்வர்யாவின் பங்கு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.