பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகில் 'இளம் காதல் மன்னன்' ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்யா. சமீப காலமாக ஆர்யாவின் படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கான பெயர் அப்படியேதான் இருக்கிறது. அடுத்தடுத்து நல்ல படங்களில் அவர் நடிக்கும் போது அவரால் மீண்டும் வெற்றியை ஈட்ட முடியும் என்றுதான் அவருடைய ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம், நட்புக்காக பல படங்களில் கௌரவத் தோற்றத்தில் ஆர்யா நடித்தது அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டதாகவே பலர் தெரிவிக்கிறார்கள். வேறு எந்த ஹீரோவும் அப்படி நடிக்க முன் வராத போது இவர் மட்டும் தொடர்ந்து நடிப்பதை நிறுத்தினால் நல்லது என்பதுதான் அவர்களின் கருத்தாக உள்ளது. கடந்த வாரம் வெளிவந்த 'இஞ்சி இடுப்பழகி' படமும் ஆர்யாவுக்கு அப்படித்தான் அமைந்துவிட்டது.
அந்தப் படத்தில் ஆர்யாவை கண்டிப்பாக ஹீரோ என்று சொல்லவே முடியாது. நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் ஆர்யா நடித்திருப்பதாகவே பல விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் ஆர்யா நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒன்று அவர் படத்தின் தயாரிப்பாளர்களுக்காக நடித்திருக்க வேண்டும், அல்லது அனுஷ்காவிற்காக நடித்திருக்க வேண்டும். அடுத்து வெளிவர உள்ள 'பெங்களூரு டேய்ஸ்' படத்திலும் மூன்று ஹீரோக்களில் ஒருவராகத்தான் ஆர்யா நடிக்கிறார். பாலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் ஐந்து ஹீரோக்களில் ஒருவராகத்தான் நடிக்க உள்ளார்.
சீக்கிரமே தனி ஹீரோவாக நடிக்க நல்ல கதையைத் தேடிப் பிடியுங்கள் ஆர்யா.