ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'நண்பேன்டா' படத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் 'கெத்து' படத்தை மட்டுமே கை வசம் வைத்திருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 'என்னை அறிந்தால், அனேகன்' ஆகிய இரண்டு படங்களும் ஹாரிஸுக்கு சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தன. 'கெத்து' படத்தின் பாடல்கள் இனிதான் வெளிவர வேண்டும்.
'கெத்து' படத்திற்குப் பிறகு வேறு எந்த படமும் ஹாரிஸுக்கு ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து அவருக்கு சில படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'சிங்கம் 3', ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு இயக்கும் படம், கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள படம் என அடுத்த ரவுண்டிற்கு அவர் தயாராகி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெறாததும், பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் சேராததும்தான் அவருடைய தொய்வுக்குக் காரணம் என் கோலிவுட்டினர் சொல்கிறார்கள். அடுத்த ரவுண்டில் தன்னுடைய பெயரை மீண்டும் நிரூபிக்க ஹாரிஸுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துள்ளன.