ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கங்காரு, வந்தாமலை உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. தற்போது சாரல் என்ற படத்தில் நடித்து வருகிறார். மைனா படம் போன்று ஒரு பேருந்திற்குள் உருவாகும் காதலை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. இதற் கடுத்து விஜய் வசந்த் நடிக்கும் திருப்பதி லட்டு என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. இதுபற்றி ஸ்ரீ பிரியங்கா கூறுகையில், கங்காரு படத்தில் செண்டிமென்ட் வேடத்தில் நடித்த நான், வந்தாமலை படத்தில் வெறித்தனமாக காதலிக்கும் ஒரு பெண்ணாக நடித்தேன். அந்த படத்திற்காக சென்னை தமிழ் பேசி நடித்தேன். எனது நடிப்பைப் பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். அதன்பிறகுதான் திருப்பதி லட்டு என்ற படம் எனக்கு கமிட்டானது.
மேலும், இப்போது நான் நடித்து திரைக்கு வர தயாராக உள்ள சாரல் படத்தில் மனசை மயிலிறகாய் வருடும் ஒரு காதல் கதையில் நடித்துள்ளேன். அதாவது வந்தாமலை படத்தில் அதிரடியாக காதலித்த நான், இந்த படத்தில் மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பில் இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். இந்த படத்தில் நடித்த எனக்கும் மனதளவில் பெரிய திருப்தி கிடைத்துள்ளது. அதோடு, அடுத்து எந்தமாதிரியான வெயிட்டான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுத்துள்ளது என்று கூறும் ஸ்ரீ பிரியங்கா, அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதிலும் ஆர்வமாக உள்ளாராம். அப்படி வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறாராம்.