‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் அதிரடி வேடத்தில் நடித்தவர் பாபி சிம்ஹா. பின்னர் அவர் வில்லனில் இருந்து ஹீரோவாக ப்ரமோஷனாகி விட்டார். அவரது கைவசம் உருமீன், இறைவி, கோ-2, பாம்பு சட்டை, வல்லவனுக்கு வல்லவன் உள்பட பல படங்கள் உள்ளன். இபபடி அவர் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பதால் கால்சீட் பிரச்சினையிலும் சிக்கியிருக்கிறார். இதனால், பாம்புசட்டை, உருமீன் படங்களுக்கு அவரை டப்பிங் பேச வைப்பதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தனர். அதையடுத்து வேறு படங்களில் நடித்துக்கொண்டே மதிய நேரங்க ளில் ஓரிரு மணி நேரங்கள் பேசி வந்த பாபி சிம்ஹா தற்போது பாம்பு சட்டை, உருமீன், கோ-2 போன்ற படங்களை முடித்துக்கொடுத்து விட்டார். அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்து வெளியான மசாலா படம் தோல்வியடைந்ததால், தற்போது தான் புதிதாக கேட்கும் கதைகளை ரொம்பவே ஆராய்கிறார் பாபி சிம்ஹா. கமர்சியல் கதைகள் என்பதே பாலிஸியாக வைத்திருந்தபோதும், அதற்குள்ளும் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்று பிரியப்படுகிறாராம் அவர். அதனால் டைரக்டர்கள் சொல்லும் கதை தனக்கு பிடித்து விடும் பட்சத்தில் இந்த கதைக்குள் ஏதாவது ஒரு நல்ல கருத்தினையும் கலந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறாராம். இப்படி திடுதிப்பென்று கருத்து கந்தசாமியாக பாபி சிம்ஹா மாறியதை அடுத்து அவரை வைத்து தற்போது படம் இயக்கி வருபவர்கள்கூட கதைக்குள் எக்ஸ்ட்ராவாக காட்சிகளை இணைத்து அதன்மூலம் ஏதேனும் சமுதாய கருத்தினை சொல்லி வருகிறார்களாம்.