இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சற்குணம் இயக்கிய களவாணி, வாகை சூடவா படங்களில் நடித்தவர் விமல். அந்த இரண்டு படங்களுமே வெற்றி வெற்றன. அதோடு வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்து சற்குணத்தை பேச வைத்தது. அதையடுத்து அடுத்த லெவலுக்கு செல்ல ஆசைப்பட்ட அவர் சில முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வந்த நிலையில், தனுஷ் அவருக்கு கால்சீட் கொடுத்து நய்யாண்டி படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சற்குணத்துக்கு கைகொடுக்கவிலலை. அதோடு, அந்த படத்தில் தனது அனுமதியில்லாமல் தொப்புள் காட்சியை சற்குணம் படமாக்கி விட்டதாக அப்பட நாயகி நஸ்ரியா, அவர் மீது கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார். அதையடுத்து அந்த காட்சியை நீக்கி விட்டு படத்தை வெளியிட்டார் சற்குணம்.
அதன்பிறகு பாலா தயாரிப்பில் அதர்வாவை வைத்து சண்டிவீரன் என்ற படத்தை இயக்கிய சற்குணம், களவாணி படத்தைப் போலவே கிராமத்து கதையில் இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது மீண்டும் அவர் விமலுடன் இணைகிறார். இந்த படத்தையும் ஒரு பக்காவான கிராமத்து கதையில் ரெடி பண்ணிக்கொண்டிருக்கும் சற்குணம், அந்த படத்தில் சூரி உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், சற்குணம் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்களுமே தனக்கு ஹிட்டாக அமைந்ததால் விமலும் அவர் படத்தில் நடிக்க தயார் நிலையில் இருக்கிறாராம்.