தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். பாகுபலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் செய்துள்ள ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். பிவிபி நிறுவனத்துடன் மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொலைகாட்சி உரிமத்தைக் கைப்பற்ற தெலுங்கு தொலைகாட்சிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவுகின்றதாம். அதிக தொகைக்கு இப்படத்தின் தொலைகாட்சி உரிமம் விலைபோகும் எனவும் கூறப்படுகின்றது. பாகுபலி படத்திற்கு அடுத்து ரூ.20 கோடி வரை பிரம்மோற்சவம் படத்தின் தொலைக்காட்சி உரிமம் விலைபோகலாம் எனவும் கூறப்படுகின்றது.