ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்துள்ள பசங்க-2 படம் கடந்த வாரமே வெளியாகி இருக்க வேண்டிய படம்.
தணிக்கைக்கு அனுப்பிய பசங்க-2 படத்தை உரிய நேரத்தில் சென்சாரில் படம் பார்க்காமல் கிடப்பில் போட்டனர்.
அதனால் சில நாட்கள் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர்.
கடைசியாக டிசம்பர் 4 அன்று பசங்க-2 படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று சூர்யா சொன்னதை அடுத்து, தியேட்டர்களை புக் பண்ணும் வேலையில் இறங்கினர்.
அதேநாளில் வெளியாகும் ஈட்டி படத்துக்கு ஏகப்பட்ட தியேட்டர்களை புக் பண்ணிவிட்டதால் பசங்க-2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
எனவே வேறு வழியில்லாமல் பசங்க-2 படத்தின் வெளியீட்டு தேதியை டிசம்பர் 18 அன்று தள்ளி வைக்க திட்டமிட்டனர்.
அன்றைக்கு தனுஷ் நடித்த தங்கமகன் படம் வெளிவருவதால் நிச்சயமாக பசங்க-2 படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்று தெரிய வந்தது.
எனவே மேலும் ஒருவாரம் தள்ளி டிசம்பர் 24க்கு தள்ளி வைத்தனர்.
இந்த தேதியை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் டிசம்பர் 24 அன்று கெத்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே 350 தியேட்டர்களை கமிட் பண்ணி அக்ரிமெண்ட் போட்டு வைத்தவிட்டாராம்.
எனவே பசங்க - 2 மேலும் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்குப் போக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.