பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சென்னையில் குடியிருந்த சமயத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கேரளா வந்திருந்தார். அதுதான் அவர் முதல்முறையாக கேரளாவுக்குள் நுழைந்தது. கேரளாவின் பசுமை அவர் மனதை அப்போதே கவர்ந்துவிட்டது.. அப்போது கேரள தேசத்தின் மீது ஏற்பட்ட காதல்தான், பின்னாளில் அவருடைய 'சிம்மாத்ரி' படத்தில் திருவனந்தபுரம், 'சாய்' படத்தில் மூணாறு, 'பாகுபலி' படத்தில் அதிரம்பள்ளி அருவி என கேரளாவின் லொக்கேசன்களை தேடிவந்து படமாக்கியதற்கும் காரணம்.
திருமணங்களையும், சினிமா டூரிஸத்தையும் வளர்க்கும் விதமாக சமீபத்தில் கேரளா டூரிஸம் போர்டு ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.. இதில் கலந்துகொள்வதற்காக சந்தோஷத்துடன் கேரளா வந்திருந்தார் ராஜமவுலி. அப்போது இவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த தெலுங்கு நண்பர் ஒருவர் கேரளாவின் அழகில் மயங்கிப்போய் தனது வாரிசுகளின் திருமணத்தை கூட இங்கேயே நடத்திவிடலாம் என ராஜமவுலியிடம் கூறினாராம்.