மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சிவாஜிகணேசன் நடித்த புதிய வானம் மற்றும் எஜமான், சிங்காரவேலன், சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், ராஜகுமாரன் உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார். கடைசியாக அவர் இயக்கிய கற்க கசடற படத்தில்தான் விக்ராந்த், ராய்லட்சுமி இருவரும் அறிமுகமானார்கள். அதோடு, அதற்கு முன்பு தான் சின்ன ராமசாமி பெரிய ராமசாமி என்ற படத்தை இயக்கி நடித்தார் உதயகுமார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், 2005க்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த அவர், தனுஷ் நடித்த அனேகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டபோது, தான் நடிப்பில் ஆர்வமாக இருப்பதாக மேடையில் பேசினார். அதையடுத்து அவர் தற்போது 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அஞ்சல உள்ளிட்ட சில படங்களில் அப்பா வேடங்களில் நடித்து வரும் ஆர்.வி.உதயகுமார், பிரபுசாலமன் இயக்கி வரும் புதிய படத்தில் ரயில் எஞ்சின் டிரைவராக நடிக்கிறார். அதையடுத்து, வந்துட்டான்யா வந்துட்டான்யா -என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு இயக்குனரான ஆர்.சுந்தர்ராஜனும் அவருக்கு இணையான ஒரு வேடத்தில் நடிக்கிறாராம்.
கதைப்படி, அந்த காலத்து பெருசுகளுக்கும், இந்த காலத்துக்கு இளசுகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பிரச்சினைதான் இந்த படத்தின் கதையாம். அதனால் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன் இருவரும் நரை தரித்த பெருசுகளாக லீடு ரோலில் நடித்திருக்கிறார்களாம். ஆக, பல வருடங்களாக திரையுலகை விட்டு விலகியிருந்த ஆர்.வி.உதயகுமார் இப்போது ஒரு நடிகராக மீண்டும் பிசியாகிக்கொண்டிருக்கிறார்.