பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்தியன், சூரத்தேங்காய் ஆகிய படங்களின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜாக்குவார் தங்கம் பேசுகையில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஒரே நிறுவனம் தயாரித்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இது ரொம்ப பெரிய விசயம். மேலும். இந்த படத்தின் நாயகன் அரவிந்த் தேனி டூ சென்னை உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு ஹீரோவுக்குள்ள அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். ஆனபோதும், அவர் தமிழனாக இருப்பதினால்தான் சினிமாவில் வளர முடியவில்லை என்று நினைக்கிறேன். தமிழனின் நிலைமையே இதுதான். இதை இங்கு பேசக்கூடாது என்று நினைத்தேன். சூழ்நிலை பேசும்படியாகி விட்டது.
மேலும், ஆந்திராவில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது, பெரும்பாலான நடிகர்கள் நிதியுதவி செய்தார்கள். அந்த பட்டியலை நானும் பார்த்தேன். ஆனால், இங்கே கோலிவுட்டில் உள்ள நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. புறநகரில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள நடிகர்கள் யாரும் நிதி உதவி செய்யவில்லை. இது வருத்தப்பட வேண்டிய விசயம்.
அதோடு, எம்ஜிஆர் இருந்த காலத்தில் அள்ளி அள்ளி கொடுத்தார். உண்மையிலேயே அவர்தான் கொடுத்து கொடுத்து சிவந்த கரம். அவரது வீட்டில் நான் மூன்று வருடங்கள் வேலை செய்தேன். அப்போது அதை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதைய நடிகர்கள் யாருக்கும் அவர் போன்று மனமில்லை. அவர் கொடுத்து கொடுத்து உயர்ந்தார். அதேபோல் கொடுக்கிற மனம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்து கொண்டேயிருப்பார்கள் என்றார்.