டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை அடையாறில் சமந்தா படித்து வந்த காலகட்டத்தில் இருந்தே அவருக்கு நிறைய தோழிகள் உண்டு. அதேபோல் ஐதராபாத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருடன் பழகி இப்போது சென்னையைப்போலவே அங்கும் அவருக்கு ஒரு நட்பு வட்டாரம் உருவாகியிருக்கிறதாம். அதனால் அவர் எப்போது வீட்டில் ஓய்வாக இருந்தாலும், அவரை காண ஒரு பெரும் தோழிகள் கூட்டம் கூடி விடுமாம். அதனால் அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் ஜாலி அரட்டையில் இறங்கி விடுவாராம் சமந்தா. இது அவரது ஐதராபாத் இல்லத்தில் அடிக்கடி நடக்குமாம்.
ஆனால், அஞ்சான் படத்திற்கு பிறகு அவர் சென்னைக்கு வந்து விட்டதால், ஆந்திர தோழிகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். காரணம், தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அரட்டை அரங்கத்திற்கு அவருக்கு போதிய நேரமே கிடைப்பதில்லையாம். அதனால் நாளடைவில் சமந்தாவை தோழிகள் தொடர்பு கொள்வதே குறைந்து விட்டதாம். இந்த நிலையில், தற்போது சமந்தாவிற்கு சில வெளிநாட்டு தோழிகள் கிடைத்திருக்கிறார்களாம். அதனால் தான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் கிடைக்கும் சில நாள் இடைவெளியில் தனது பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு டூர் அடிக்கிறார் சமந்தா. அப்போது அங்குள்ள தோழிகளையும் சந்தித்து மகிழ்கிறாராம்.