வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
முன்பெல்லாம் சினிமாக்களில் கதாநாயகிகள் கவர்ச்சியில் எல்லை தாண்ட மாட்டார்கள். அதனால் இடைவேளைக்குப்பிறகு ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணுவதற்காக ஒரு கவர்ச்சி நடிகையை நடனமாட வைப்பார்கள். ஆனால் கதாநாயகிகளே கவர்ச்சி நடிகைகளாகவும் மாறிய பிறகு அந்த நிலை மாறி விட்டது. ஒவ்வொரு பாடல்களிலுமே கவர்ச்சிதான் என்ற நிலையாகி விட்டது. அதேபோல் முன்னணி ஹீரோயினிகளே சமீபகாலமாக குத்துப்பாட்டுக்கும் ஆடத் தொடங்கி விட்டனர். கேட்கிற சம்பளத்தை கிடைத்தால் அயிட்டம் பாடல்களுக்கு ஆட எந்த முன்னணி நடிகைகளும் மறுப்பதில்லை.
இந்த நிலையில், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் குத்தாட்டமாடிய அஞ்சலி, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சரைனொடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படங்களை சேர்ந்த சிலர், ஹீரோயினாக நடிக்கும்போது அயிட்டம் பாடலுக்கு நடனமாடினால் இந்த படங்களின் வியாபாரம் பாதிக்குமே என்றார்களாம். அதற்கு, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ நடிகைகள் ஒரு பாட்டுக்கு நடனமாடிதானே வருகிறார்கள். இப்போது இதெல்லாம் ஒரு பேஷனாகி விட்டது. இதனால் நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்கிறாராம் அஞ்சலி.