கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கேரளாவில் ஹிட் படங்களின் திருட்டு விசிடிகள் தொடர்ந்து வெளியாவது தயாரிப்பாளர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. நம்ம ஊரைப்போல் இல்லாமல் கேரளாவில் திருடத் விசிடி விற்பது வெகுவாக குறைவுதான். இருந்தாலும் அங்கும் சில, பைரேட் மாபியாக்கள் ஊடுருவிவிட்டார்கள். “பைரஸியை நிறுத்துங்கள் எப்படி எங்களை வேறொருவரின் யோசனைகளை, சிந்தனைகளை திருடக்கூடாது என்கிறீர்களோ, அதேபோல எங்களது படங்களையும் யாரும் திருடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படத்திற்கு அதற்குண்டான சன்மானம் கிடைக்க வழி செய்யுங்கள்” என பிரேமம் படத்தின் திருட்டு விசிடி வெளியானபோது எதிர்ப்புக்குரல் கொடுத்தார் மம்முட்டி.
பிரேமம் பட விவகாரத்துக்குப்பின் கொஞ்சநாள் அடங்கியிருந்தபோது போல இருந்த இந்த கும்பல், இப்போது பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'அமர் அக்பர் அந்தோணி' படத்தின் திருட்டு விசிடியை விற்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கேரளா திக்கரக்கரா போலீஸார், இந்தப்படத்தின் சிடிக்களை சப்ளை செய்த ஸ்ரீகாந்த் என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் வசம் இருந்த படத்தின் மொத்த டிவிடிகளையும் மற்றும் சில படங்களின் டிவிடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.