டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஈராஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ''பஜிராவ் மஸ்தானி''. இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 18ந் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் வெளிவரவுள்ளது. பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்தின் தமிழ் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
படம் பல்வேறு மொழிகளில் வெளியாவது குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: பஜிராவ் மஸ்தானி நான் பல நாட்களாக சொல்ல நினைத்த கதை. இத்திரைப்படத்தை தென்னிந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் அவர்களுடைய சொந்த மொழியில் பார்க்க இருக்கிறார்கள். இத்திரைப்படம் என்னுடைய பலநாள் கனவு , நான் இந்த கனவோடு பலநாட்கள் வாழ்ந்திருக்கிறேன். மொழிகளை கடந்து என்னை போல் ரசிகர்களும் இந்த கனவோடு வாழவேண்டும்" என்கிறார்.