‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தனர். அவர்களுடன் அப்பா-அம்மாவாக டைரக்டர் ராஜசேகர்-குயிலியும் நடித்தனர். அப்போது காதலர்களாக நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவருக்குமிடையே நிஜத்திலும் காதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து மிர்ச்சி செந்தில் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து வரும் நிலையில் ஸ்ரீஜா இல்லத்தரசியாகி விட்டார்.அதையடுத்து, சரவணன் மீனாட்சி தொடரின் சீசன்-2வில் பின்னர் கவின்-ரஷிதா இருவரும் நடித்து வருகின்றனர். முன்பு அப்பா-அம்மாவாக நடித்த டைரக்டர் ராஜசேகர்-குயிலி இருவரும் சீசன்-2வில் தாத்தா பாட்டியாகி விட்டனர்.
மேலும், சீசன் -2வில் நாயகியாக நடித்து வரும் ரஷிதா, தனது துடுக்குத்தனமான நடிப்பினால் சின்னத்திரை நேயர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதேபோல் சினிமாத்துறையினரையும் அவரது நடிப்பு கவர்ந்ததால், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரஷிதா. அதோடு, சின்னத்திரையை விடவும் பெரிய திரையில் இன்னும் பலபடி உயர்ந்து சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள ரஷிதா, தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்கள் கிடைத்தால் சின்னத்திரையை போலவே சினிமாவையும் தொடரப்போகிறாராம்.