பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாரி படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் 'தங்கமகன்' படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதையடுத்து பிரபுசாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பவர், இந்த படத்தை முடித்து விட்டு, வெற்றிமாறனின் வடசென்னை மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. பிரபுசாலமன் படவேலைகளை முடித்துக்கொடுத்து விட்டுத்தான் இந்த படங்களில் நடிக்கிறாராம் தனுஷ்.
மேலும், வடசென்னை படத்தில் வட சென்னைவாசியாக நடிக்கும் தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகிறது. இதற்கு முன்பு தனுஷ் நடித்த சில படங்களில் லேசான அரசியல் டச் இருந்தாலும் இந்த மாதிரி முழுக்கதையும் அரசியலில் பயணித்ததில்லை. அந்த வகையில், இது தனுஷின் அதிரடி அரசியல் படமாக இருக்கும் என்கிறார்கள்.
குறிப்பாக, ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான மெட்ராஸ் படம் எப்படி அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் உருவானதோ அதேபோல் இந்த படத்திலும் அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடியை வைப்பது சம்பந்தமான பிரச்சினை பூதாகரமாக வெடிக்குமாம். ஒரு கொடிக்காக என்னென்ன கலவரங்கள் நடக்கிறது என்பதுதான் இந்த படமாம். அதனால் தற்போது அந்த படத்திற்கு கொடி என்று பெயரை தேர்வு செய்து வைத்திருக்கிறார்களாம்.