பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளம், ஹிந்தியில் தொடர்ந்து கமர்ஷியல் படங்களையும் காமெடிப்படங்களையும் இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். அவ்வப்போது மாறுபட்ட படங்களை இயக்கினாலும் பிரியதர்ஷனுக்கு கமர்ஷியல் டைரக்டர் என்றே பெயரே நிலைத்திருக்கிறது. தன் இமேஜிலிருந்து மாறுபட்டு 'காஞ்சிவரம்' படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. தேசிய விருதுகள் பெற்ற காஞ்சிவரம் படத்தைப்போல் விருதைக் குறிவித்து பிரியதர்ஷன் தற்போது இயக்கியுள்ள படம் 'சில சமயங்களில்'.
'காஞ்சிவரம்' படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இப்படத்திலும் நடித்திருக்க இவர்களுடன் ஒரு முக்கிய கேரக்டரில் அஷோக் செல்வனும் நடித்துள்ளார். பட்டு நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கையை 'காஞ்சிவரம்' படத்தில் சொன்னார் பிரியதர்ஷன்.
'சில சமயங்களில்' படத்திலோ 'எய்ட்ஸ்' நோயை கதைக் கருவாக்கியிருக்கிறார். சில நேரங்களில் என்று பெயர் சூட்டப்பட்டு பின்னர் சில சமயங்களில் என்று பெயர் மாற்றப்பட்ட இப்படம் குறித்து சமீபத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் வெளிப்படையாகப்பேசி உள்ளார்...
''ஒரே ஒரு நாளில், எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்துகொண்டு அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் எட்டு பேரின் பதற்றம், சிரிப்பு, அழுகை கலந்த கதை தான் 'சில சமயங்களில்'” என்று கூறியிருப்பதோடு, தான் இதுவரை இயக்கிய 90 படங்களில் ஒரு படைப்பாளியாக தனக்கு பெரும் மனநிறைவை தந்த இரண்டு படங்கள் 'காஞ்சிவரம்' மற்றும் 'சில சமயங்களில்' ஆகியவை தான்'' என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய், அமலா பால் இப்படத் தயாரித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.