தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓடும் பஸ்சில், ஓடும் ரயிலில், பறக்கும் விமானத்தில், ஒரு தனி அறையில் முழு பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு கேரவனுக்குள்ளேயே முழு பாலையும் எடுத்திருக்கிறார்கள்.
கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திற்காக இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுகிறவர். அதோடு காதலர்களையும் சேர்த்து வைக்கிறவர். மதுரையிலிருந்து தப்பி ஓடிவரும் காதலர்களை அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து வைப்பதற்காக தனது சகாக்களுடன் காதலர்களை கேரவனில் மதுரைக்கு அழைத்துச் செல்வார். அப்போது இந்த பாடல் வருகிறது.
"ஏதாவது புதிதாக செய்யலாமே என்று தோன்றியபோது இந்த யோசனை வந்தது. 17 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட கேரவனிலேயே பாடலை எடுத்தோம். இசை அமைப்பாளர் அருணகிரியின் இசையும், ஒளிப்பதிவாளர் கண்ணனின் உழைப்பும் இந்த பாடலில் தெரியும்" என்கிறார் இயக்குனர் கணபதி பாலா.