ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சந்தன கடத்த்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு ராம்கோபால் வர்மா இயக்கி உள்ள படம் கில்லிங் வீரப்பன். இதில் வீரப்பனாக கன்னட நடிகர் சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார். வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமாராக சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
இவர் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக யாக்னா ஷெட்டியும், வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் சூப்பிரண்டாக லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும் நடித்துள்ளனர். இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகி உள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிட ராம்கோபால் வர்மா முடிவு செய்துள்ளார்.
வீரப்பனை சுட்டுக் கொல்லும் வேடத்தில் ராஜ்குமார் மகன் சிவராஜ்குமாரே நடித்திருப்பதால் கன்னடத்தில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெரிய தொகைக்கு ஏரியாக்கள் விற்றிருக்கிறது. தெலுங்கில் ராம்கோபால் வர்மா படத்துக்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதால் அங்கும் விற்றுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில்தான் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
வீரப்பனை கொடூரமானவனாக படம் சித்தரிப்பதால் இங்குள்ள தியேட்டரில் அதனை வெளியிட்டால் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள், சில ஜாதி அமைப்பினரால் பிரச்சினை உண்டாகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி தியேட்டர்காரர்கள் படத்தை வெளியிட மாட்டார்கள் என்பதால் இந்த தயக்கம் இருக்கிறது.
இதற்கு முன்பு வீரப்பன் கதையை வனயுத்தம் என்ற பெயரில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் படமாக இயக்கினார். இதில் வீரப்பனாக கிஷோரும், போலீஸ் அதிகாரி விஜயகுமாராக அர்ஜுனும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப் படம் கன்னடத்தில் வீரப்பன் அட்டகாசா என்ற பெயரில் வெளிவந்தபோதும் தமிழ்நாட்டில் வனயுத்தம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முத்துலட்சுமி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலும் படம் வெளிவந்தது.