‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடகவியலாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலையை மையமாக வைத்து உருவான போர்க்களித்தில் ஒரு பூ என்ற படத்தை எஸ்.வி.சேகர் உள்ளிட்ட தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு தணிக்கை சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இந்த நிலையில் போர்களத்தில் ஒரு பூ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் போலீசில் புகார் செய்தார்.
தற்போது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் "தனக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் கொலை மிரட்டல் வருகிறது. எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையிடம் மனுதாரர் (எஸ்.வி.சேகர்) ஒரு வாரத்துக்குள் தனது புகார் மனுவை கொடுக்க வேண்டும். அதுபற்றி காவல்துறை விசாரித்து அது உண்மையென்றால் அவரை அழைத்துப்பேசி அவருக்கு பாதுகாப்பு கொடுக்க சட்டப்படி தேவவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். என்று உத்தரவிட்டது.