தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் இருந்து மூன்று ஜோடிகளில் மாதவன் - மீரா ஜாஸ்மின், சூர்யா - இஷா தியோல், சித்தார்த் - த்ரிஷா ஆகியோர் இருந்தனர். 2004ல் வெளிவந்த படத்தில் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழில் அப்போதே ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், அப்போது படத்தில் நடித்த அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்களாகவே இருந்தார்கள். தமிழில் அதற்குப் பிறகு அப்படி ஒரு கூட்டணி மீண்டும் அமையவில்லை.
11 வருடங்களுக்குப் பிறகு அந்த ஜோடிகளில் ஒன்றான சித்தார்த், த்ரிஷா ஜோடி 'அரண்மனை 2' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் இணைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள 'அரண்மனை 2' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “12 வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோருடன் பீச்சில் படப்பிடிப்பு. காலம் பறக்கிறது,” தற்போதைய படப்பிடிப்பு பற்றி 'அரண்மனை 2' படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
'அரண்மனை 2' படத்திற்கு முன்பாக சித்தார்த் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' அடுத்த மாதம் வெளியாகிறது.