தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னையில் கடந்த 23ம் தேதி திங்கள்கிழமையன்று மாலை ஆரம்பமான மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடும் மழை காரணமாக தெருக்கள் முழுவதும் தேங்கிய மழை நீரால் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. அலுவலம் முடிந்து வீடு திரும்ப முயற்சித்த பலர் நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும்தான் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
அந்தச் சமயத்தில் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த நடிகை ஹன்சிகா, கிண்டி அருகே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தாராம். அவர் கார் நின்ற இடத்தை விட்டு நீண்ட நேரமாகியும் நகராததால், உதவிக்கு வேறு யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலையில் முழங்கால் அளவிற்குத் தேங்கியிருந்த மழை நீரில் பொதுமக்களுடன் நடந்து அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று தஞ்சமடைந்தாராம்.
மும்பையில் 2005ல் இப்படி ஒரு வெள்ளம் வந்த போது தோழியின் வீட்டிலேயே தங்கியிருந்து விட்டு நிலைமை சீரானதும் வீட்டுக்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
சென்னையை என்னுடைய வீடாகவே நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்னுடைய அன்பும், பிரார்த்தனையும் எப்போதுமிருக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.