பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகிலும் வேறு எந்த ஒரு ஹீரோயினுக்கும் வழங்கப்படாத சம்பளம், நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரமுடன் எந்தக் காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, விக்ரமுடன் ஜோடி சேர்ந்தது எப்படி என்று கடந்த வாரம் கோலிவுட்டே ஆச்சரியமாகப் பார்த்தது. அந்த ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் முனைப்பு காட்டினர்.
தற்போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நயன்தாராவைப் பொறுத்தவரையில் எப்போதுமே தன்னுடைய சம்பளத்தில் தெளிவாக இருப்பார். வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதால் சம்பளத்தை அதிகப்படியாகக் கேட்பாராம். அப்படிக் கேட்டால் அவர்களாகவே போய்விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படியும் சிலர் அந்த அதிக சம்பளத்திற்கு சம்மதித்தால் நடித்துவிடுவாராம். ஏற்கெனவே, இப்படியாக சில படங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
விக்ரம் படத்திற்காகவும் அப்படித்தான் மறுப்பதற்காக சம்பளத்தை அதிகமாகக் கேட்கிறார். ஆனால், நயன்தாராவே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த சம்பளத்தை அவருக்குக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்பட்டு நயன்தாரா யோசிப்பதற்குள் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள் என்கிறது கோலிவுட்டின் கிசுகிசு வட்டாரம். நயன்தாராவுக்கான சம்பளம் மட்டுமே 3 கோடியாம். எத்தனை ஹீரோயின்கள் அடுத்து சம்பளத்தை உயர்த்தப் போகிறார்களோ...?