ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பாலிவுட்டில் வில்லன், குணசித்ர வேடங்களில் பிரபலமாக பேசப்படுபவர் ஓம் புரி. அவ்வப்போது சர்ச்சையாக ஏதையாவது கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கம். 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்கிற படத்தில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பிய இவர், இப்போது லேட்டஸ்டாக சகிப்புத்தன்மை பற்றி அமீர்கான் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என குரலை உயர்த்தியுள்ளார் ஓம் புரி. சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், 1988ல் 'புரவ்ருதம்' என்கிற மலையாள படத்தில் நடித்த ஓம் புரி, தற்போது 27 வருடம் கழித்து மலையாள திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கும் காரணத்தை பார்க்கலாம்.
இவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் 'ஆடுபுலியாட்டம்'. படத்தை இயக்கும் கண்ணன் தாமரைக்குளம் எதற்காக ஒம் புரியை அழைத்து வந்தார் என்கிற காரணத்தை அவரே சொல்கிறார். “சில கேரக்டர்களில் ஓம் புரி மாதிரியான ஆட்கள் நடிக்கும்போது அதன் ஆழத்தை உள்வாங்கி வெளிப்படுத்த முடியும். இந்தப்படத்தில் டாக்டர் மகேஷ்வர யோகி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஓம் புரி. இந்தப்படத்தில் அவர் கிட்டத்தட்ட ஒரு மாய விஞ்ஞானியாக நடிக்கிறார். அந்த கேரக்டரை அவரைத்தவிர யாரும் பண்ணமுடியாது என தோன்றியதால் அவரை அழைத்து வந்தோம்” என்க்கிறார் கண்ணன் தாமரைக்குளம். இந்தப்படத்தில் ஜெயராமும் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.