தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க நடிகர் ரன்பீர்கான் முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர்பூர். இந்தாண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் தயாராகியுள்ளது. இதில் 'ராய்', 'பாம்பே வெல்வெட்' படங்கள் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது, 'தமாஷா' படம் நாளை (நவ.,27ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... இனி, ஒரேசமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு படத்தின் கேரக்டரில் இருந்து மற்றொரு படத்தின் கேரக்டருக்கு உடனடியாக மாறுவது சற்று கடினமாக உள்ளது. ஆனால் நான் மாறித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் நான் ஒரு நடிகன், அது தான் எனது அடையாளம் என்று கூறியுள்ளார்.
'தமாஷா' படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். ரன்பீருடன் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படம் நாளை(நவ.27) ரிலீஸாகிறது.