ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை என பல படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த். இப்போது அவரது கைவசம் கூட்டத்தில் ஒருவன் என்ற படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் தெகிடி அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ப்ரியாஆனந்த். மேலும், இதுவரை நடித்த படங்களில் நடிப்புக்காக பேசப்படாத அவர், அரிமா நம்பி படத்தில் ஒரு பார் சீனில் சரக்கு அடிப்பது போன்று நடித்து சர்ச்சைக்குள் சிக்கினார். மற்றபடி பெரிய அளவிலான பரபரப்பு வளையத்திற்குள் அவர் வரவில்லை.
அதோடு, அவர் பெரிதும் எதிர்பார்த்த இரும்புக்குதிரை, வை ராஜா வை போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரியாஆனந்துக்கு வரயிருந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டன. அதனால் தற்போது கூட்டத்தில் ஒருவன் படத்தில் மட்டுமே நடித்து வரும் ப்ரியாஆனந்த், அடுத்து மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கவும் தயாராகி விட்டார். குறிப்பாக, தற்போது கோடம்பாக்கத்தில் பேய் சீசன் நடிப்பதால், பேய் கதைகளில் நடிப்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். அதனால் யாராவது பேய் படங்கள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார் ப்ரியாஆனந்த்.