தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் நேற்று வெளியிடப்பட்டது. தலைப்பு வெளியான கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே தலைப்பு பற்றிய சர்ச்சையும் ஆரம்பமாகிவிட்டது.
'தெறி' என்ற தலைப்பில் ஏற்கெனவே சதீஷ்குமார் என்ற இளம் இயக்குனர் பட விளம்பரத்தை செப்டம்பர் 1ம் தேதியே வெளியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. அது குறித்து தன்னுடைய முகப்புத்தகத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என் படத்தின் பெயர் 'தெறி' வேறு ஒரு தயாரிப்பாளரால் வேறு படத்துக்கு எடுக்கப்பட்டுவிட்டது. கேட்டால் ஆயிரம் காரணம் சொல்றாங்க, இந்த பொழப்புக்கு....
நான் யோசிச்சி என் படத்துக்கு பேர் 'தெறி'ன்னு மூணு மாசம் முன்னாடியே வைப்பேனாம், பெயர் ரிஜிஸ்டரும் செய்வேனாம். ஆனால், ரிஜிஸ்டர் புக் அவங்ககிட்ட இருக்குதுன்றதுக்கு என் படப் பெயரை அவர் படத்துக்கு தூக்கி வச்சிப்பாராம், அதுவும் அனுமதி இல்லாம. அவங்க ஏற்கெனவே ரிஜிஸ்டர் பண்ண மாதிரி ரிஜிஸ்டர் புக்ல பக்கத்தை மாத்திப்பாங்களாம். இதுக்காக அவங்க கூட நான் சண்டை போட மாட்டேன், ஆனால், கேட்டால் நானே கொடுத்திருப்பேனே,” எனப் பதிவு செய்திருக்கிறார்.
செப்டம்பர் மாதம் 1ம் தேதியே அவர் 'தெறி' என்ற பெருடன் விளம்பர டிசைன் ஒன்றையும் அவருடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த சமயத்தில் “என்னுடைய முதல் தமிழ்ப் படமான 'தெறி' படத்தைப் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய படத்தின் முதல் பார்வை இதோ, அக்டோபர் மாதம் முதல் ஷுட்டிங் 'தெறி'க்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலை முதல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக கதை காப்பியடிப்பதை விட தலைப்பை காப்பியடிப்பதுதான் அதிகமாக நடந்து வருகிறது. இளம் இயக்குனர் சதீஷ்குமாருக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.