ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாட்டில் சகிப்புத்தன்மை தொடர்பான பேச்சுக்களும், விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அதிலும் சினிமா பிரபலங்கள் இதுதொடர்பான கருத்துக்களை சொல்ல அது சர்ச்சையாகிவிடுகிறது. பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் சகிப்புத்தன்மை தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் சகிப்புதன்மை தொடர்பான சர்ச்சையில் நானும் சிக்கினேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். கோவாவில் 46வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது... இரு மாதங்களுக்கு முன்னர் ஈரானிய திரைப்படமான மெஸெஞ்சர் ஆப் காட் என்ற படத்திற்கு இசையமைத்திற்காக எனக்கு பத்வா விதிக்கப்பட்டது. அதேப்போன்று நான் பங்கேற்க இருந்த இரண்டு இசை நிகழ்ச்சியையும் கடைசிநேரத்தில் ரத்து செய்தார்கள். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்.
காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். ஒட்டுமொத்த புரட்சியையும் அகிம்சை மூலமே கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் காந்தி என்றார்.