டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சங்கம் பற்றி அவதூறு பேசியதாக வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. நடிகர் சங்கத்திற்கு கடந்த செப்.18ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் அணியும், விஷால் அணியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். விஷால் அணிக்கு ஆதரவாக வடிவேலுவும் களமிறங்கினார். அப்போது பேசிய வடிவேலு நடிகர் சங்கத்தை காணவில்லை என்று தன் பட டயலாக்குளை போன்று அள்ளிவிட்டார். இந்தச்சூழலில் நடிகர் சங்கம் தொடர்பாக அவதூறு பேசியதாக அய்யாவு என்பவர் வடிவேலு மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வடிவேலு, நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நடிகர் வடிவேலு, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். வடிவேலுவின் மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, நாமக்கலில் நடைபெறும் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக இடைக்கால தடைவதித்து உத்தரவிட்டார்.