தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற என்னு நிண்டே மொய்தீன் படம் உருவாக காரணமாக இருந்தவர் கோழிக்கோட்டை சேர்ந்த காஞ்சனமாலா. காரணம் 1960களில் இவருக்கும் மொய்தீன் என்பவருக்குமான அமரத்துவமான காதலைத்தான் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அப்படியே படமாக இயக்கியிருந்தார். ஆனால் பட உருவாக்க சமயத்தில் தனக்கும் மொய்தீனுக்குமான இன்னும் சில சம்பவங்களை சொல்லி, அவை படத்தில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் இயக்குனரிடம் சொன்னாராம் காஞ்சனமாலா. ஆனால் படக்குழுவினர் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளாததால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார் காஞ்சனமாலா.
மேலும் அந்த கோபத்தில்தான் படம் ரிலீசாகி, அதை அனைவரும் பாராட்டியும் கூட படத்தை இன்னும் பார்க்காமல் தவிர்த்து வருகிறார் காஞ்சனமாலா. இது ஒருபக்கம் இருக்க, தனது காதலர் ஞாபகமாக கோழிக்கோட்டில் ஒரு சிறிய அறையில் அவர் நடத்திவரும் மொய்தீன் சேவா மந்திர் என்னும் நூலகத்திற்கு கட்டடம் கட்ட உதவி செய்வதாக அளித்த வாக்குறுதிகளையும் மொய்தீன் படக்குழுவினர் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். அதற்கு காரணமாக காஞ்சனமாலா தங்கள் மீது தொடுத்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் தங்களால் உதவமுடியவில்லை என்று சப்பைக்கட்டு கட்டினார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.
இந்த நேரத்தில் தான் காஞ்சனமாலாவின் நிலையறிந்து அவருக்கு ஆதரவுக்கரம் கொடுக்க முன்வந்தார் திலீப். காஞ்சனமாலாவின் விருப்பப்படி, மொய்தீன் சேவா மந்திர் நூலகத்திற்காக பெரிய அளவில் புதிய கட்டடம் கட்டித்தருவதாக வாக்களித்த அவர், சொன்னபடி சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு முக்கம் பகுதியில் அதற்கான அடிக்கல்லையும் நாட்டி விழா எடுத்தார். இதை தொடர்ந்து காஞ்சனமாலாவிடம் பேசி, மொய்தீன் படக்குழுவினருடனான வழக்கை வாபஸ் வாங்குமாறும், இந்த கட்டடம் கட்டும் விஷயத்தில் அவர்களும் ஒருங்கிணைந்து உதவ தயாராக இருப்பதாகவும் கோரிக்கை வைத்தார் திலீப். தனக்காக இவ்வளவு தூரம் மெனெக்கெடும் திலீப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கிவிட்டாராம் காஞ்சனமாலா.