Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்பின் வேண்டுகோளை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கினார் காஞ்சனமாலா..!

25 நவ, 2015 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Dileep-request---Kanchanamala-withdrawn-case

பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற என்னு நிண்டே மொய்தீன் படம் உருவாக காரணமாக இருந்தவர் கோழிக்கோட்டை சேர்ந்த காஞ்சனமாலா. காரணம் 1960களில் இவருக்கும் மொய்தீன் என்பவருக்குமான அமரத்துவமான காதலைத்தான் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அப்படியே படமாக இயக்கியிருந்தார். ஆனால் பட உருவாக்க சமயத்தில் தனக்கும் மொய்தீனுக்குமான இன்னும் சில சம்பவங்களை சொல்லி, அவை படத்தில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் இயக்குனரிடம் சொன்னாராம் காஞ்சனமாலா. ஆனால் படக்குழுவினர் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளாததால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார் காஞ்சனமாலா.


மேலும் அந்த கோபத்தில்தான் படம் ரிலீசாகி, அதை அனைவரும் பாராட்டியும் கூட படத்தை இன்னும் பார்க்காமல் தவிர்த்து வருகிறார் காஞ்சனமாலா. இது ஒருபக்கம் இருக்க, தனது காதலர் ஞாபகமாக கோழிக்கோட்டில் ஒரு சிறிய அறையில் அவர் நடத்திவரும் மொய்தீன் சேவா மந்திர் என்னும் நூலகத்திற்கு கட்டடம் கட்ட உதவி செய்வதாக அளித்த வாக்குறுதிகளையும் மொய்தீன் படக்குழுவினர் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். அதற்கு காரணமாக காஞ்சனமாலா தங்கள் மீது தொடுத்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் தங்களால் உதவமுடியவில்லை என்று சப்பைக்கட்டு கட்டினார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.


இந்த நேரத்தில் தான் காஞ்சனமாலாவின் நிலையறிந்து அவருக்கு ஆதரவுக்கரம் கொடுக்க முன்வந்தார் திலீப். காஞ்சனமாலாவின் விருப்பப்படி, மொய்தீன் சேவா மந்திர் நூலகத்திற்காக பெரிய அளவில் புதிய கட்டடம் கட்டித்தருவதாக வாக்களித்த அவர், சொன்னபடி சில நாட்களுக்கு முன் கோழிக்கோடு முக்கம் பகுதியில் அதற்கான அடிக்கல்லையும் நாட்டி விழா எடுத்தார். இதை தொடர்ந்து காஞ்சனமாலாவிடம் பேசி, மொய்தீன் படக்குழுவினருடனான வழக்கை வாபஸ் வாங்குமாறும், இந்த கட்டடம் கட்டும் விஷயத்தில் அவர்களும் ஒருங்கிணைந்து உதவ தயாராக இருப்பதாகவும் கோரிக்கை வைத்தார் திலீப். தனக்காக இவ்வளவு தூரம் மெனெக்கெடும் திலீப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கிவிட்டாராம் காஞ்சனமாலா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in