ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால், தற்போது நடித்துவரும் 'புலி முருகன்' படம் இதுநாள் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்களின் பட்ஜெட்டை எல்லாம் தாண்டி மிகப்பெரிய பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. ஆக்சன் த்ரில்லராக, புதிய களத்தில் உருவாகி வரும் இந்தப்படம் சித்திரை விஷு ரிலீசாக மார்ச் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இன்னும் டிரைலரோ, டீசரோ, ஆடியோவோ எதுவும் வெளியாகவில்லை. அவ்வளவு ஏன்..? மோகன்லாலின் பர்ஸ்ட் லுக் ஒன்றைத்தவிர வேறு புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை.. இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆழப்புழாவில் உள்ள பங்கஜம் தியேட்டர்காரர்கள் அதிரடியான சோதனை முயற்சி ஒன்றை மேற்கொண்டு 'புலி முருகன்' படத்திற்கு உருவாகியுள்ள மாஸ் வேல்யூவை நிரூபித்துள்ளார்கள். அதாவது இன்னும் நான்கு மாதங்கள் கழித்து தங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கும் 'புலி முருகன்' படத்திற்கு, இப்போதே புக்கிங்கை துவங்கி விட்டார்கள். இந்த தகவல் வெளியான குறைந்த நேரத்திலேயே மளமளவென்று முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று ஹவுஸ்புல்லாகி விட்டனவாம். அடுத்தடுத்த காட்சிகளுக்கான இருக்கைகளும் நிரம்பி வருகின்றனவாம். நிச்சயமாக இந்திய சினிமாவில் இதுபோன்ற ஒரு சாதனையை முதலில் நிகழ்த்துவது மோகன்லாலாகத்தான் இருக்கும்.