தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனனின் மின்னலே படத்தில் தனது கேரியரை தொடங்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ். பின்னர் மஜ்னு, சாமி, கோவில், காக்க காக்க, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பன், துப்பாக்கி, அனேகன் வரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் மெலோடி இசைக்கு முக்கியத்துவம் கெடுத்து வந்த அவர், ஒரு கல் ஒரு கண்ணாடியில் வேணாம் மச்சான் வேணாம், அனேகனில் டங்காமாரி ஊதாரி -போன்ற குத்துப்பாடல்களையும் கொடுத்து காலத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொண்டு வருகிறார்.
மேலும், கெளதம்மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வந்திருப்பதால் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கும் அவரையே புக் பண்ணினார் கெளதம்மேனன். அந்த படத்தின் பாடல்களும் ஹிட்டானது. அதனால் அதற்கடுத்து அஜீத் நடித்த வேதாளம் படவாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் நினைத்திருந்த வேளையில், அந்த வாய்ப்பு அனிருத்துக்கு சென்றுவிட்டது.
அதோடு, அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம்-3 படவாய்ப்பும் அனிருத்துக்கே சென்றிருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது ஏற்கனவே தனது சாமி, படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜையே டைரக்டர் ஹரி சிங்கம்-3 படத்திற்கு புக் பண்ணியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், சிங்கம், சிங்கம்-2 படங்களுக்கு இசையமைத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத்தின் இடத்தை ஹாரிஸ் ஜெயராஜ் கைப்பற்றியிருக்கிறார்.